என்டிஆர் - நீல் திரைப்படத்திலிருந்து விலகிய டொவினோ தாமஸ்!
என்டிஆர் - பிரசாந்த் நீல் திரைப்படம் குறித்து...
நடிகர் டொவினோ தாமஸ் நடிகர் என்டிஆர் உடனான திரைப்படத்திலிருந்து விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் டொவினோ தாமஸ் நரிவேட்டை திரைப்படத்தைத் தொடர்ந்து பள்ளிச்சட்டாம்பி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது, ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிரீயட் காலமாக உருவான இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதற்கிடையே, கேஜிஎஃப், சலார் திரைப்படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் என்டிஆர் நடிக்கும் புதிய திரைப்படத்தில் டொவினோ தாமஸ் வில்லனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், படப்பிடிப்பு தேதி நெருக்கடி காரணமாக இப்படத்திலிருந்து டொவினோ விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
summary