தாயாகும் ஜன நாயகன் பட நடிகை!
தாயாகப் போவதை அறிவித்த பிரபல நடிகை....
விரைவில் தாயாகவுள்ளதாக பிரபல நடிகை புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளான கால்பந்து வீராங்கனையாக நடித்தவர் பிரபல மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான். தொடர்ந்து, தமிழில் எஃப்ஐஆர் படத்தில் நடித்தார். தற்போது, ஜன நாயகனில் நடித்து முடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு கவனம் ஈர்த்தும் வருவார். இதற்கிடையே, கடந்த 2022 ஆம் ஆண்டு தன் நீண்ட நாள் காதலரான ஜோமான் ஜோசஃப் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
Advertisement
இந்த நிலையில், ரெபா மோனிகா தான் கர்ப்பமாக இருப்பதைப் புகைப்படங்கள் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
அதில், “இருவராக இருந்து மூவராக மாறப்போகிறோம். உங்கள் அன்பும் வாழ்த்துகளும் தேவை” எனக் கூறியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.