முகப்பு
செய்திகள்

10-வது நாளிலும் 900 திரைகள்! மிரட்டும் கருப்பு!

கருப்பு திரைகள் குறித்து...

நடிகர் சூர்யா
பகிர்:

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் 900 திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படமாக கருப்பு மாறியுள்ளது. மே 15 ஆம் தேதி வெளியான இப்படம் இன்று வரை பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக அரங்கம் நிறைந்தபடியே இருப்பதால் இந்தாண்டின் அதிகம் வசூலித்த வெற்றிப்படங்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை ரூ. 230 கோடி வரை வசூலித்த இப்படம் இந்த வார இறுதிக்குள் கூடுதல் வசூலைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படம் வெளியாகி 10-வது நாளிலும் 900 திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முதல் நாளைவிட அதிகம்.

அதிகபட்சம் 3 நாள்களில் திரைகளின் எண்ணிக்கை குறையும் என்றாலும் கருப்புக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டதால் தொடர்ந்து அதிகப்படியான காட்சிகளுடன் வசூலைக் குவித்து வருகிறது.

Actor Suriya's film Karuppu has been screened on 900 screens.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.