தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய வெற்றிமாறனின் உதவி இயக்குநர்!
இயக்குநர் ரவிஅரசு தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனம் குறித்து...
ஈட்டி திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ரவிஅரசு தனது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதற்கு ’ஃபைவ் சி ஃபிலிம்ஸ்’ - FIVE C’s Films எனப் பெயரிட்டுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்து பின்னர் இயக்குநராக மாறியவர்தான் ரவிஅரசு. இவர் இயக்கத்தில் ஈட்டி, ஐங்காரன் என்ற திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இயக்குநர் ரவிஅரசு தனது தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்துள்ளார். ’ஃபைவ் சி ஃபிலிம்ஸ்’ எனப் பெயரிட்டுள்ள இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
Advertisement
Advertisement
இயக்குநர் வெற்றிமாறனிடம் 2004ல் உதவி இயக்குநராக அறிமுகமானேன். அங்கு பத்தாண்டுகள் பயணித்தேன். அவருடனான பயணத்தில் கதைசொல்லியாவதில் மிகவும் உணர்ச்சிமிக்க படைப்பாளனாக மாற்றியது.
இதுவரை நான் ஈட்டி, ஐங்காரன் என்ற படங்களை இயக்கியுள்ளேன். தமிழ் சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகளைக் கடந்துள்ள நான் 2026ல் எனது பயணத்தில் புதிய மாற்றத்துக்கு முன்னேறியுள்ளேன். ’ஃபைவ் சி ஃபிலிம்ஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன்.
இந்த நிறுவனத்தில் எனது இயக்கத்திலான படங்களும் இளம் படைப்பாளர்களின் படங்களும் தயாரிக்கப்படும். மிகவும் என்டர்டெயின்மென்ட், கவனத்தை ஈர்க்கும் வகையிலான படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இந்த நேரத்தில், இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்த எனது ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகத்தினர் அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிய பயணத்திலும் இதேமாதிரியான ஆதரவளிப்பீர்கள் என நம்புகிறேன்.
முதல் படத்தின் குறித்து விரைவில் அறிவிப்பேன். நன்றி எனக் கூறியுள்ளார். சமீபத்தில் பேட் கேர்ள் படத்துடன் தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.