அமைச்சரவையில் 2 பிராமணர்கள்: எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் கருத்து!
தமிழக அமைச்சரவையில் இரண்டு பிராமணர்கள் இடம்பெற்றுள்ளது குறித்து எதிர்நீச்சல் இயக்குநர் வெளியிட்ட விடியோ குறித்து...
தமிழக அமைச்சரவையில் இரண்டு பிராமணர்கள் இடம்பெற்றுள்ளது குறித்து எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ள திருச்செல்வம் பேசியதாவது:
''சமீபத்தில் பதவியேற்ற தமிழக அமைச்சரவையில் 2 பிராமணர்கள். அறநிலையத் துறையை பிராமணர்கள் கையில் எப்படி ஒப்படைக்கலாம் என தமிழ்நாட்டில் மாறுபட்ட சிந்தனை உடையவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Advertisement
Advertisement
ஒருகாலத்தில் கல்வி மறுக்கப்பட்டபோது இடஒதுக்கீடு மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. இப்போது பாகுபாடு குறைந்து சமநிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். இதில் 2 அமைச்சர்கள் பிராமணர்கள். இதை சந்தேகத்துடன் வகைப்படுத்துவது அரசை குறைத்து மதிப்பிடுவதாகும்.
சமுக நீதிகாத்த வீராங்கனை என்று ஜெயலலிதாவை நாம்தான் கூறினோம். ஜெயலலிதா பிராமணர்தானே. ஜெயலலிதாவை நம்பிய நாம் இவர்களையும் நம்மலாமே. இதில் என்ன தவறு. நல்லது நினைப்போம். நல்லதே நடக்கும்'' என திருச்செல்வம் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இந்து அறநிலையத் துறை அமைச்சராக ரமேஷ், உணவுத் துறை அமைச்சராக வெங்கட்ரமணன் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிராமணர்கள் என்றும், கடந்த ஆட்சியில் பிராமணர்களுக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
ஆனால், இந்த ஆட்சியில் பிராமணர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வந்த நிலையில், திருச்செல்வம் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.