FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அமைச்சரவையில் 2 பிராமணர்கள்: எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் கருத்து!

தமிழக அமைச்சரவையில் இரண்டு பிராமணர்கள் இடம்பெற்றுள்ளது குறித்து எதிர்நீச்சல் இயக்குநர் வெளியிட்ட விடியோ குறித்து...

அமைச்சரவையில் பிராமணர்களுக்கு இடமளிக்கப்பட்டது குறித்து பேசும் இயக்குநர் திருச்செல்வம் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

தமிழக அமைச்சரவையில் இரண்டு பிராமணர்கள் இடம்பெற்றுள்ளது குறித்து எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ள திருச்செல்வம் பேசியதாவது:

''சமீபத்தில் பதவியேற்ற தமிழக அமைச்சரவையில் 2 பிராமணர்கள். அறநிலையத் துறையை பிராமணர்கள் கையில் எப்படி ஒப்படைக்கலாம் என தமிழ்நாட்டில் மாறுபட்ட சிந்தனை உடையவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement

ஒருகாலத்தில் கல்வி மறுக்கப்பட்டபோது இடஒதுக்கீடு மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. இப்போது பாகுபாடு குறைந்து சமநிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். இதில் 2 அமைச்சர்கள் பிராமணர்கள். இதை சந்தேகத்துடன் வகைப்படுத்துவது அரசை குறைத்து மதிப்பிடுவதாகும்.

சமுக நீதிகாத்த வீராங்கனை என்று ஜெயலலிதாவை நாம்தான் கூறினோம். ஜெயலலிதா பிராமணர்தானே. ஜெயலலிதாவை நம்பிய நாம் இவர்களையும் நம்பலாமே. இதில் என்ன தவறு. நல்லது நினைப்போம். நல்லதே நடக்கும்'' என திருச்செல்வம் பேசியுள்ளார்.

தவெக அமைச்சரவையில் இந்து அறநிலையத் துறை அமைச்சராக ரமேஷ், உணவுத் துறை அமைச்சராக வெங்கட்ரமணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆட்சியில் பிராமணர்களுக்கு இடம் கொடுக்கப்படவில்லை; ஆனால், இந்த ஆட்சியில் பிராமணர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வந்த நிலையில், திருச்செல்வம் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

summary

Two Brahmins in the Cabinet: Ethirneechal Director Thiruchelvam Comments goes viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments