முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களுக்காக இணையத்தில் கடுமையாக ட்ரால் செய்யப்படும் ஜான்வி கபூர்!

இந்தியாவின் மிகப் பிரபலமான சூப்பர் ஸ்டார் நடிகையாக இருந்தவர் இறந்திருக்கிறார். அவரது இறப்பிற்காக குறைந்த பட்சம் 13 நாட்களாவது துக்கம் அனுஷ்டிக்கக் கூடாதா?

Updated On : 8 மார்ச் 2018, 3:38 pm IST
பகிர்:

அம்மா ஸ்ரீதேவி துபையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்து 10 நாட்கள் கடப்பதற்குள் நேற்று மார்ச் 7 ஆம் தேதி ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் முகம் கொள்ளாச் சிரிப்புடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. பகிர்ந்திருப்பது அவரது சித்தப்பா அனில் கபூரின் மகளும், பிரபல நடிகையுமான சோனம் கபூர் மற்றும் போனி கபூரின் மூத்த மனைவி மோனா கபூரின் மகள் அன்சுலா கபூர்.

இன்ஸ்டாகிராமில் இவர்கள் பகிர்ந்திருக்கும் புகைப்படங்களைக் கண்டு சிலர்,

'உங்களை ஸ்ரீதேவி மறைவுக்காக அப்படியே சோகத்தில் மூழ்கி இருங்கள் என்று கூறவில்லை, ஆனால், இந்தியாவின் மிகப் பிரபலமான சூப்பர் ஸ்டார் நடிகையாக இருந்தவர் இறந்திருக்கிறார். அவரது இறப்பிற்காக குறைந்த பட்சம் 13 நாட்களாவது துக்கம் அனுஷ்டிக்கக் கூடாதா? இறப்பில் நாங்கள் துயரப்படுகிறோம் என உருக்கமாகக் கடிதம் எழுதி விட்டு இப்போது சகோதரிகளுடன் சோகத்தின் சுவடே இன்றி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி அதை வலையிலும் ஏற்ற வேண்டுமா? உங்களுக்கே தெரியும், உங்களது குடும்பம் ஸ்ரீதேவி மறைவின் பின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறது என; வலையுலகில் மக்கள் உங்களைத் தான் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். வெறும் வாய்க்கு அவல் கிடைத்தாற் போல நீங்களாக ஏன் இப்படி கொண்டாட்டமான புகைப்படங்களை வலையேற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.’

Advertisement

Advertisement

- என கருத்துரை இட்டிருக்கிறார்கள். ஆனாலும் அந்தக் கருத்துரைகளையெல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தாமல் அன்சுலா கபூரும், சோனம் கபூரும் தொடர்ந்து ஜான்வி கபூரின் பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களை வலையேற்றிக் கொண்டு தான் இருந்திருக்கிறார்கள். 

வாழ்வில் முக்கியமான நபரொருவர் துரதிர்ஷ்டவசமாக மறைந்து விட்டார் எனில், நாமும் அவருடனே உயிரை மாய்த்துக் கொள்ள முடியாது. இழப்பைத் தாண்டி வாழ்வு முன்னேறிச் செல்லத்தான் வேண்டும். ஆனால், அந்த மாற்றம் இயல்பானதாக இருக்க வேண்டும். அனுதாபத்தால் மக்களின் கவனம் அனைத்தும் உங்கள் மீது உள்ளபோது நாங்கள் எங்களது துக்கத்தைச் சடுதியில் கடந்து விட்டோம் என்பதாக கபூர் சகோதரிகள் இந்தப் புகைப்படங்களை இணையத்தில் பரப்பியதால் வந்த வினை இது. அவர்களுக்கு அது ஒரு பொருட்டில்லை எனினும் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகர்களை மனவருத்தம் கொள்ளச் செய்வதாக அமைந்து விட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.