நீட்-மறுதேர்வெழுதும் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களும் விளக்கமும்!
நீட்-மறுதேர்வெழுதும் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களும் விளக்கங்களும்
ஜூன் மாதம் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வை எழுதும் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு தேசிய தேர்வு முகமை பதிலளித்துள்ளது.
பொதுவாக எழும் கேள்விகளை பட்டியலிட்டு, அதற்கான விளக்கத்தையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, நிகழாண்டு மே 3-ஆம் தேதி 22 லட்சம் போ் எழுதிய இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு ரத்து செய்யப்பட்டு, மறு தேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கேள்விகள் - விளக்கம்
தேர்வுக் கட்டணம் திருப்பி வழங்கப்படுகிறதா?
விளக்கம்: தற்போதைய முகவரி விவரங்களைப் புதுப்பிப்பதற்கான வசதியும், இரண்டு நகரங்களைத் தேர்ந்தெடுக்கும் வசதியும் தேர்வர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்வுக் கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்காக வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர்வதற்கான வழிமுறை ஏற்படுத்தப்படுகிறது.
தேர்வு மொழியை மாற்ற முடியுமா?
இல்லை. விண்ணப்பப் படிவத்தை முன்னதாகச் சமர்ப்பிக்கும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வு மொழியே இறுதியானது, அதை மாற்ற முடியாது.
விண்ணப்பப் படிவத்தை நிரப்பும்போது புதுப்பிக்கப்பட்ட படிவத்தில் முகவரி மற்றும் மொழியின் அடிப்படையில், நகரத்தை தேர்வு செய்வதும், தேர்வு மொழியை மாற்ற இயலவில்லை என்றும் ஒரு செய்தி தோன்றுகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்?
விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் போது விண்ணப்பதாரரால் முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வு மொழி நிலையானது என்றும், இந்தக் கட்டத்தில் அதை மாற்ற முடியாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள், கிடைக்கப்பெறும் மொழித் தேர்வுகள் மற்றும் அதற்கேற்ற மாநிலங்கள்/இடங்கள் குறித்து NEET (UG)-2026 தகவல் கையேட்டின் பிரிவு 4, பத்தி 6(ix)-ஐப் பார்க்கவும்.
முன்பு தேர்வெழுதிய அதே மையம் மறுதேர்வுக்கும் ஒதுக்கப்படுமா?
தேர்வர் தேர்ந்தெடுக்கும் நகரத்தின் அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுகின்றன. எனவே, மறுதேர்விற்காக ஒதுக்கப்படும் தேர்வு மையம், முந்தைய மையமாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை.