ஜேஇஇ - நீட் ஒரே தேர்வாக நடத்தப்படுமா? மத்திய அரசு பரிசீலனை
ஜேஇஇ - நீட் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே தேர்வாக நடத்தப்படுவது குறித்து மத்திய அரசு பரிசீலனை
நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த சம்பவத்தில், தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்படும் நிலையில், அடுத்தாண்டு முதல் கணினி வழியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு, ஜேஇஇ-உடன் ஒருங்கிணைத்து ஒரே தேர்வாக நடத்தப்படுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கணினி முறையில் இளநிலை பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த தேசிய பொது நுழைவுத் தேர்வை நடத்துவது சாத்தியமா என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நீட் இளநிலை 2026 வினாத்தாள் கசிந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற குழுவிடம், தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2024ஆம் ஆண்டு நீட் தேர்வின்போது வினாத்தாள் கசிந்த நிலையில், இஸ்ரோ முன்னாள் தலைவர்டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையல் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவினர் அளித்த பரிந்துரை குறித்து மத்திய அரசு தற்போது பரிசீலனை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement