4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி!
மதிமுக வேட்பாளர்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இணைந்து போட்டியிடும் மதிமுகவுக்கு 4 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. அதில், ஒரு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மதுரை தெற்கு, மொடக்குறிச்சி, கடையநல்லூர், சீர்காழி ஆகிய தொகுதிகள் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், சீர்காழியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என வைகோ தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மதிமுக வேட்பாளர்கள் 4 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக வைகோ புதன்கிழமை அறிவித்துள்ளார்.
திமுக நேரடியாக164 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் 12 தொகுதிகளிலும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடவுள்ளன.