4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி!
மதிமுக வேட்பாளர்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இணைந்து போட்டியிடும் மதிமுகவுக்கு 4 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. அதில், ஒரு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மதுரை தெற்கு, மொடக்குறிச்சி, கடையநல்லூர், சீர்காழி ஆகிய தொகுதிகள் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், சீர்காழியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என வைகோ தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மதிமுக வேட்பாளர்கள் 4 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக வைகோ புதன்கிழமை அறிவித்துள்ளார்.
திமுக நேரடியாக164 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் 12 தொகுதிகளிலும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடவுள்ளன.
MDMK to contest in all 4 constituencies under the 'Rising Sun' symbol!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.