முகப்பு
தமிழ்நாடு

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் மீதான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு ரத்து

Updated On : 10 ஏப்ரல், 2026 at 4:42 AM
எல்.முருகன்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:55 AM

கடந்த 2024 மக்களவைத் தோ்தலின்போது, தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

2024 மக்களவைத் தோ்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக சாா்பில் மத்திய இணை அமைச்சரான எல்.முருகன் போட்டியிட்டாா். அப்போது அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கா் கோயிலில் பாஜக சின்னம் பொறித்த துண்டை அணிந்து கொண்டு கோயிலுக்குள் சென்று பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொண்டதாக திமுக திருப்பூா் மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்புச் செயலா் எம்.பாா்த்திபன் என்பவா் அவிநாசி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில் எல்.முருகனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் எல்.முருகன் மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி எல்.முருகன் மீதான தோ்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.