தமிழ்நாட்டில் ஒன்றுமில்லாத பாஜகவுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்! கேஜரிவால்
சென்னையில் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்கள் சந்திப்பு பற்றி...
தமிழ்நாட்டில் ஒன்றுமில்லாத பாஜகவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில் கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
”ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலான தொகுதி மறுவரையறை மசோதாவை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக எதிர்க்கிறோம். இந்த மசோதாவால் தென் மாநிலங்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார் எனக் கருதுகிறேன். மக்களுக்கு நற்பணிகளை மேற்கொள்ளும் எவருக்கும் ஆதரவு அளிக்கப்பட வேண்டும்.
பாஜகவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காதீர்கள். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எவ்விதமான ஆதரவும் இல்லை” எனத் தெரிவித்தார்.
Do not give importance to the BJP, which has no presence in Tamil Nadu! — Kejriwal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.