பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல்!
பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தது பற்றி...
பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது.
இந்த நிலையில், பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் விஜய், வியாசர்பாடி தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அவருக்கு மாற்று வேட்பாளராக வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சிவா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே, திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிடவுள்ள தவெக தலைவர் விஜய், வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், தவெக தேர்தல் பிரசார பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.