தேர்தல் 2026 முடிவுகளை மாற்றும் நிலையில் 110 தொகுதிகள்! எப்படி?
தமிழ்நாடு தேர்தல் 2026 முடிவுகளை மாற்றும் நிலையில் 110 தொகுதிகள் உள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தவெக முன்னிலையில் இருந்தாலும் 110 தொகுதிகள் தேர்தல் முடிவுகளை மாற்றும் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது தமிழ்நாட்டில் பகல் 12.30 மணி நிலவரப்படி எண்ணப்பட்டிருப்பது வெறும் 30% வாக்குகள் மட்டுமே. மொத்தம் பதிவான வாக்குகளில் 1.49 கோடி வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. எண்ணப்பட வேண்டிய 4.88 கோடி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதாவது மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் எண்ணப்பட வேண்டியிருப்பதால், தேர்தல் முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், 110 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ள வேட்பாளர்கள், அதிகபட்சமாக 5000 வாக்குகளுக்கும் குறைவான வாக்குகளில்தான் முன்னிலையில் இருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
உதாரணமாக கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 5 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலையில் உள்ளது.
உளுந்தூர்பேட்டையில் 38 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது.
சிதம்பரம் தொகுதியில் 42 வாக்குகள் வித்தியாசத்தில் மதஜ முன்னிலை வகிக்கிறது.
அருப்புக்கோட்டையில் 501 வாக்குகள் வித்தியாசத்தில் கேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முன்னிலையில் உள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலையில் உள்ளது.
திருவெறும்பூரில் 19 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலையில் உள்ளது.
27 தொகுதிகளில் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை நிலவரம் அமைந்துளள்து.
சோழவந்தானில் 15 வாக்குகள் வித்தியாசத்திலும் நாமக்கல் தொகுதியில் 50 வாக்குகள் வித்தியாசத்திலும் போடியில் 173 வாக்குகள் வித்தியாசத்தில் பன்னீர்செல்வம் முன்னிலையில் உள்ளார்.
இதுபோன்று இரட்டை இலக்க எண்களின் வித்தியாசத்தில் இருக்கும் 110 தொகுதிகள் வெற்றி வாய்ப்பை யாருக்கு வேண்டுமானாலும் பரிசளிக்கலாம் என்று கூறப்படுகிறது.