மேற்கு வங்க மறுதேர்தல்: 1 மணி வரை 60% வாக்குப்பதிவு!
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் மறுதேர்தலில் 1 மணி வரை 60 சதவிகித வாக்குகள் பதிவானது குறித்து...
மேற்கு வங்கத்தில் உள்ள ஃபால்டா தொகுதியில் நடைபெற்று வரும் மறுதேர்தலில் 1 மணி நேர நிலவரப்படி, 60 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்கத்த்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், ஃபால்டா தொகுதியில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் வந்ததால் தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதியில் மறுதேர்தலுக்கான தேதியை அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று காலை முதல் ஃபால்டா தொகுதியில் உள்ள 285 வாக்குச் சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பிற்பகல் 1 மணி வரை 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாக்களித்ததாகவும், எந்த இடத்திலிருந்தும் வன்முறைச் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்றும் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த மறுவாக்குப்பதிவில் 1,21,300 ஆண்கள், 1,15,135 பெண்கள் மற்றும் ஒன்பது மூன்றாம் பாலினத்தவர் உள்பட மொத்தம் 2.36 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்தத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
In the ongoing re-election in the Falta constituency of West Bengal, 60 percent of the votes have been recorded as of 1 PM.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.