FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

பல்வேறு பதவிகளுக்கான நேர்காணல் தேதி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் பல்வேறு பணியிடங்களுக்கு நடத்திய தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான

Updated On : 29 ஜூன் 2018, 8:16 am IST
பகிர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் பல்வேறு பணியிடங்களுக்கு நடத்திய தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய துறைகளுக்கான புள்ளிவிவராளர் பதவிக்கு தேர்வெழுதி தகுதி பெற்ற 62 பேருக்கு ஜூலை 10 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு இந்திய சமய அறநிலைய ஆட்சித் துறையில் செயல் அலுவலர் நிலை-1 பணிக்கான தேர்வில் தகுதி பெற்ற 9 பேருக்கு ஜூலை 4 ஆம் தேதியும், இளநிலை பகுப்பாய்வாளர் பணிக்கானத் தேர்வில் தகுதி பெற்ற 31 பேருக்கும், இளநிலை இரசாயனர், இரசாயனர் மற்றும் தொல்லியல் இரசாயனர் ஆகிய பணியிடங்களுக்கானத் தேர்வில் தகுதி பெற்ற 30 பேருக்கும் ஜூலை 10 ஆம் தேதியும் சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இது குறித்த விவரங்களை www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments