FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காமன்வெல்த்: அரையிறுதிக்கு முன்னேறிய தமிழன் விஷால் தென்னரசு கயல்விழி!

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய தமிழக வீரர் விஷால் தென்னரசு கயல்விழி குறித்து...

Updated On : 28 ஜூலை 2026, 6:24 pm IST
விஷால் தென்னரசு கயல்விழி. - படம்: எக்ஸ் / சாய் மீடியா.
பகிர்:

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரர் விஷால் தென்னரசு கயல்விழி (22 வயது) அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை கோலாகலமாக தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகின்றன.

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியின் ஐந்தாவது நாளான நேற்று (ஜூலை 27) மட்டுமே இந்தியா ஒரு தங்கம் உள்பட ஆறு பதக்கங்களை வென்று அசத்தியிருந்தது. மொத்தமாக இதுவரை 10 பதக்கங்களை வென்றுள்ளது.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி 65 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார். ஸ்னாட்ச் பிரிவில்126 கிலோ, க்ளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோ என மொத்தமாக 286 கிலோவைத் தூக்கி, இரண்டாமிடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஜோலார்பேட்டைச் சேர்ந்த விஷால் டி.கே எனப்படும் விஷால் தென்னரசு கயல்விழி ஆடவர் 400 மீட்டர் தடகள போட்டியில் 46.49 வினாடிகளில் கடந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஒட்டுமொத்த பிரிவில் அவர் 14ஆவது வீரராக முடித்திருக்கிறார். 400 மீட்டரில் இந்தியாவின் தேசிய சாதனை (44.98 வினாடி) இவர் வசமிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு தமிழக வீரர் ராஜேஷ் ரமேஷ் 47.43 வினாடிகளில் ஓடி ஒட்டுமொத்தமாக 25ஆவது இடத்தைப் பிடித்தார். மொத்தமாக 16 பேர் தேர்வான நிலையில் அவர், அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தார்.

அரையிறுதிப் போட்டிகள் வரும் ஜூலை 30ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. மொத்தம் தேர்வாகியுள்ள 16 பேர்களில் 8 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள்.

summary

Commonwealth Games 2026: Tamil Nadu's Vishal Thennarasu Kayalvizhi qualify for the semi-final

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments