மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தொலைத் தொடர்பு துறையில் காலியாக உள்ள யங் புரபெஷனல் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Department of Telecommunications (DoT)
பணி: Young Professional
காலியிடங்கள்: 20 (Category A- 6, Category B- 5, Category C- 3, Category D- 6)
வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம்| வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசுத் துறைகளில் 5000 பணியிடங்கள்: எஸ்எஸ்சி அறிவிப்பு
தகுதி: பட்டம், பொறியியல் துறையில் (எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், சிஎஸ், ஐடி) பிரிவுகளில் முதுநிலைப் பட்டம், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், எம்பிஏ, சிஏ, ஐடிடபுள்யுஏ, சிஎப்ஏ, சட்டத்துறையில் பட்டம், பொருளாதாரம், புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி அனுபவம்: சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://my.forms.app/form/61e53e13d42da26ef87cf707 என்ற லிங்கின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன், அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து arvindk.jha29@gov.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான சேர கடைசி நாள்: 23.02.2022
மேலும் விபரங்கள் அறிய www.dot.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம்| தேசிய கட்டுமானக் கழகத்தில் வேலை வேண்டுமா?