இந்திய அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தின் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள பணியாளர் கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தின் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள பணியாளர் கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை
பணி: Staff Car Driver (Ordinary Grade)
காலியிடங்கள்: 17
1.Mail Motor Service Coimbatore - 11
2. Erode Division - 02
3. Nilgiris Division - 01
4. Salem West Division - 02
5. Tiruour Division - 01
சம்பளம்: மாதம் ரூ.18,000 - ரூ.62,000
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அழைப்பு
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்து சான்றிதழ்கள் சாரிபார்ப்பு மற்றும் அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பங்களை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Manager Mail Motor Service, Goods Shed Road, Coimbatore – 641001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.03.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_13012022_MMS_Coimbatore_Eng.pdf ZVdJ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.3.46 லட்சம் சம்பளத்தில் டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?