முகப்பு
வேலைவாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு? ரூ. 63,200 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை 

இந்திய அஞ்சல் துறையின் கோயம்புத்தூரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் காலியாக Skilled Artisans பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Updated On : 15 ஜூலை 2022, 2:48 pm IST
பகிர்:

இந்திய அஞ்சல் துறையின் கோயம்புத்தூரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். DMMS/E-123/2021/01

பணி: Skilled Artisans

Advertisement

Advertisement

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Mechanic - 02
2. Electrician - 01
3. Welder - 01
4. Carpenter - 01
5. Tyreman - 01
6. Copper & Tinsmith - 01

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு சலுகை அளிக்கப்படும். 

தகுதி: அறிவிக்கப்பட்டுள்ள பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மெக்கானிக் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கனரக, இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுக் கட்டணம்: ரூ.400, விண்ணப்பப் படிவ கட்டணம் ரூ.100. இதனை இந்தியன் போஸ்டல் ஆர்டராக (ஐபிஓ) எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.indianpost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் (சுய சான்று செய்யப்பட்ட) இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Manager, Mail Motor Service, Goods Shed Road, Coimbatore - 641 001

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.08.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments