விண்ணப்பித்துவிட்டீர்களா..? தொழில் பழகுநர் பயிற்சிக்கு நாளைக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னையில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு அளிக்கப்படும் தொழில் பழகுநர் பணிக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்காலம்.
சென்னையில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு அளிக்கப்படும் தொழில் பழகுநர் பணிக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து நாளைக்குள்(ஜூன் 25) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 214
பயிற்சி: கிராஜூவேட்
காலியிடங்கள்: 104
தகுதி: பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: கிராஜூவேட் பயிற்சிக்கு மாதம் ரூ.9,000
Advertisement
பயிற்சி: டெக்னீசியன்
காலியிடங்கள்: 110
தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: டெக்னீசியன் பயிற்சிக்கு மாதம் ரூ.8,000
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?
தேர்வு செய்யப்படும் முறை : தகுதி, மதிப்பெண் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : http://boat-srp.com/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.06.2022
மேலும் விவரகங்கள் அறிய http://boat-srp.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | டிஆர்டிஓ-வில் வேலை வேண்டுமா? பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு