FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ. 44,900 சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் வேலை

நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற உதவியாளர் (மொழிபெயர்ப்பாளர்) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 6 மே 2022, 2:36 pm IST
பகிர்:

நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற உதவியாளர் (மொழிபெயர்ப்பாளர்) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண். F.6/2021-SCA(RC)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

Advertisement

Advertisement

பணி: Court Assistant (Junior Translator) 

காலியிடங்கள்: 25 (தமிழ், அசாம், வங்காளம், தெலுங்கு, குஜராத்தி, உருது, மராத்தி, கன்னடம், மலையாளம், மணிப்பூரி, ஒடியா, பஞ்சாபி மொழியில் தலா 2 இடங்களும், நேபாளி -01)

தகுதி: ஆங்கிலத்தில் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் இருந்து காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மொழிக்கு மொழிபெயர்க்கும் பணியில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவமும், கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2021 தேதியின்படி 32 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. எஸ்சி, எஸ்டி, பிரிவினருக்கு ரூ. 250 கட்டணமாக செலுத்த வேண்டும்.  

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.05.2022

மேலும் விவரங்கள் அறிய  https://main.sci.gov.in/recruitment என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments