பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் வேலை: 3614 காலியிடங்கள்
பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் இளநிலைப் பட்டதாரிகளுக்கான 3614 தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு
பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் இளநிலைப் பட்டதாரிகளுக்கான 3614 தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெட்யிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 3,614
பயிற்சியின் பெயர்கள்:
1. Trade Apprentice
2. Technician Apprentice
3. Graduate Apprentice
செக்டார் வாரியான காலியிடங்கள் விவரம்:
* வடக்கு செக்டார் - 209
* மும்பை செக்டார் - 305
* மேற்கு செக்டார்- 1434
* கிழக்கு செக்டார் - 744
* தெற்குசெக்டார் - 694 (சென்னை-50, காக்கிநாடா-58, ராஜமுந்திரி-353, காரைக்கால்-233),
* மத்திய செக்டார் -228
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 15.05.2022 தேதியின்படி, 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9000, டிரேடு அப்ரென்டிஸ் ரூ. 8050, டிப்ளமோ அப்ரென்டிஸ் ரூ. 8,000.
தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்து தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeshipindia.org, www.portal.mhrdnats.gov.in ஆன்லைன்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.05.2022
மேலும் விவரங்கள் அறிய www.ongcindia.com அல்லது www.ongcapprentices.ongc.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Related Article
விண்ணப்பித்துவிட்டீர்களா..? - தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் வேலை
ரூ. 44,900 சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் வேலை
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பட்டதாரிகளுக்கு வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு