முகப்பு
வேலைவாய்ப்பு

தமிழக அரசில் வேலை... எங்கு, எப்போது, எப்படி விண்ணப்பிப்பது?

ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 2:53 pm IST
பகிர்:

ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 631

அறிக்கை எண் 27/2022

Advertisement

Advertisement

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: உதவி புள்ளியியல் ஆய்வாளர்
காலியிடங்கள்: 211
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 75,900

பணி: கணக்கிடுபவர்
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

பணி: புள்ளியியல் தொகுப்பாளர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

வயதுவரம்பு: 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.

தகுதி: புள்ளியியல், கணிதம், கணினி அறிவியல், பொருளாதாரம் போன்ற ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:  நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150 + தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஏற்கனவே நிரந்த பதிவு இருப்பவர்கள் நிரந்தர பதிவு கட்டணம் செலுத்த வேண்டாம். கட்டண சலுகைகள் குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.10.2022

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 21.01.2023 

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/stat%202022%20tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments