முகப்பு
வேலைவாய்ப்பு

திருச்சி என்ஐடி-ல் வேலை: சிவில் என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் சிவில் துறையில் காலியாகவுள்ள Project Assistant பணி

Updated On : 5 மார்ச், 2025 at 9:42 AM
திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி
பகிர்:

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் சிவில் துறையில் காலியாகவுள்ள Project Assistant பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். NITT/R&C/CVL/1973/R/NHAI/MR/2025

பணி: Project Assistant

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.15,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nitt.edu இணையதளத்தில் கொடுக்கப்பட் டிருக்கும் கூகுள் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழகளின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Dr. Sunitha V

(Principal Investigator), Associate Professor, Department of Civil Engineering, National Institute of Technology, Tiruchirappalli - 620 015. Ph: 0431-2503165 (Ο),09443302930 (M)

Email ID: sunitha@nitt.edu, sunitha.nitt@gmail.com.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 7.3.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.nitt.edu இணையதளத்தில் கொடுக்கப்பட் டிருக்கும் அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

முழு கட்டுரையைப் படிக்க →