குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 24) கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம்
குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 24) கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.
கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், இளநிலை வருவாய் ஆய்வாளா் உள்பட குரூப் 4 பணிகளில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களுக்கு கடந்த மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. தோ்வுக்கு லட்சக்கணக்கானவா்கள் விண்ணப்பம் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், தோ்வுக்கு இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 24) நள்ளிரவு 11.59 வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, இணையதளத்தில் விண்ணப்பத்தை திருத்த மே 29 முதல் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
குரூப் 4 தோ்வானது தமிழ்நாடு முழுவதும் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தோ்வாணைய அறிவிக்கையில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.