கோப்புப் படம் 
வேலைவாய்ப்பு

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 24) கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம்

Din

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 24) கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், இளநிலை வருவாய் ஆய்வாளா் உள்பட குரூப் 4 பணிகளில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களுக்கு கடந்த மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. தோ்வுக்கு லட்சக்கணக்கானவா்கள் விண்ணப்பம் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், தோ்வுக்கு இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 24) நள்ளிரவு 11.59 வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, இணையதளத்தில் விண்ணப்பத்தை திருத்த மே 29 முதல் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தோ்வானது தமிழ்நாடு முழுவதும் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தோ்வாணைய அறிவிக்கையில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான ஸ்காட்லாந்து அணி விவரம்!

ராணி முகர்ஜியின் அழகின் ரகசியம் இதுதான்!

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி விவரம்!

தமிழ்நாட்டில் ரூ.34,230 கோடி மதிப்பிலான 15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்: அமைச்சர் டிஆர்பி ராஜா

ரஷியா - அமெரிக்கா ஒப்பந்தம் இன்றுடன் முடிவு! மீண்டும் ஓர் அணு ஆயுதப் போட்டியா?

SCROLL FOR NEXT