விண்ணப்பித்துவிட்டீர்களா..? சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தில் உதவி மேலாளர் பணி!
மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச நிதிச் சேவை ஆணையத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு ....
மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச நிதிச் சேவை ஆணையத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.25-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officer Grade-A(Assistant Manager)
பிரிவு: General
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 12
தகுதி: புள்ளியியல், பொருளாதாரம், வணிகவியல், வணிக நிர்வாகம்(நிதி), பொருளாதாரவியல் ஆகிய ஏதாவதொன்றில் முதுநிலைப் பட்டம் அல்லது தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது வணிகவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் சிஏ, சிஎப்ஏ, சிஎஸ், ஐசிடபுள்யுஏ -இல் இளநிலை அல்லது சட்டப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Legal
காலியிடங்கள்: 4
தகுதி: சட்டப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Information Technology
காலியிடங்கள்: 4
தகுதி: தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் அல்லது கம்பியூட்டர் அப்ளிகேசன், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ.62,500 - 1,26,100
வயதுவரம்பு: 25.9.2025 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் தேர்வு நிலை I மற்றும் நிலை II என இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.1000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ifsca.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.9.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
IFSCA hereby invites applications from Indian citizens for filling up the posts of Officer Grade ‘A’ (Assistant Manager). IFSCA reserves the right to fill up or not to fill up any of all posts or terminate this process completely at any stage and accordingly...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.