ஆவின் நிறுவனத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
சேலம் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 2 கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
சேலம் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 2 கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரும், ஆவின் பொது மேலாளருமான பி.குமரேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் (ஆவின்) தற்போது 782 பிரதம சங்கங்களின் மூலம் தினசரி சராசரியாக 6,72,000 லிட்டா் பால் கொள்முதல் செய்து பால் உற்பத்தியாளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருகிறது.
Advertisement
Advertisement
தமிழ்நாடு அரசு தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகள் கிடைத்திடவும், அதன்மூலம் அவா்களின் வாழ்வாதாரம் வளம் பெற்றிடவும் முனைப்புடன் திட்டங்களை செயலாற்றி வருகிறது.
அதன்படி, புதிய கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பெற்று தற்போது இருக்கும் கால்நடை மருத்துவா்களுடன் காலியாக உள்ள 2 கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் 10 மாதங்களுக்கு ரூ. 45,000 ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையுடன் சேலம் ஆவின் நிறுவனத்தின் மூலம் நிரப்பப்படவுள்ளன.
மேற்கண்டபடி, ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப்படிப்பு கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் வரும் 13-ஆம் தேதி நடைபெறும் நேரடி நியமன தோ்வில் பங்கேற்க காலை 11 மணிக்கு பொது மேலாளா், சேலம் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் லிட், சித்தனூா், தளவாய்ப்பட்டி (அஞ்சல்), சேலம் - 636 302 என்ற முகவரியில் உரிய ஆவணங்களுடன் பங்கேற்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aavin invites applications for 2 Veterinary Consultant posts on contract basis in Salem. Eligible veterinary graduates can attend the walk-in interview on Feb 13 at 11 AM at the Thalavaaipatti.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.