கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை: 7-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாகவுள்ள கப்பல் கட்டும் தளம்-இயந்திர ஓட்டுநர் மற்றும் லாஸ்கர் பணி..
இந்திய அரசின் பட்டியலிடப்பட்ட முன்னணி 'மினி ரத்னா' நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாகவுள்ள கப்பல் கட்டும் தளம்-இயந்திர ஓட்டுநர் மற்றும் லாஸ்கர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 7-ம் வகுப்பு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரங்களை பார்ப்போம்...
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: CSL/P&A/RECTT/CONTRACT/BOATCREW/2024/6
Advertisement
Advertisement
பணி: Serang
காலியிடங்கள்: 6
சம்பளம் : Rs.23,300
வயதுவரம்பு: 22.7.2026 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தகுதி : 7 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Lascar cum Serang பணிக்கான தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Engine Driver
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.23,300
தகுதி : 7-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்துத் துறையால் வழங்கப்படும் Engine Driver பணிக்கான சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 45-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதித் தேர்வு, தொழிற்திறனை நிரூபிக்கும் செய்முறைத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் மருத்துவத் தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200 மட்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
cochin shipyard limited vacancy notification for Lascar cum Serang post
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.