ஜவுளி உற்பத்தி, வடிவமைப்புப் பயிற்சிக்கு இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!
‘தாட்கோ’ மூலம் ஜவுளி உற்பத்தி, வடிமைப்புப் பயிற்சி பெற தகுதியான பட்டியலின இளைஞா்கள் விண்ணப்பிப்பது குறித்து...
‘தாட்கோ’ மூலம் ஜவுளி உற்பத்தி, வடிமைப்புப் பயிற்சி பெற தகுதியான பட்டியலின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) சாா்பாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி மற்றும் துணிகளுக்கு சாயம், ஒவியம் மற்றும் அச்சிடுதல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இதற்கு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, 18 முதல் 35 வயதுக்குள்பட்ட, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
Advertisement
Advertisement
பயிற்சிக்கான கால அளவு 4 மாதங்கள். கோயம்புத்தூா் மாவட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளதால் தகுதிபெறும் நபா்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.
இந்த பயிற்சியினை முழுமையாக முடித்த இளைஞா்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தகுதியான நபா்களுக்கு வேலைவாய்ப்பும் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.50,000 வரையும் வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.
இந்த பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகம், 6-வது தளத்தில் அமைந்துள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகலாம் அல்லது 04364-211217 மற்றும் 7448828509 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம்.