மதுரையில் கள்ளழகர் தசாவதாரம்
மதுரை ராமராயர் மண்டபத்தில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் விடிய விடிய நடைபெற்ற தசாவதார நிகழ்ச்சியில் முத்தங்கி சேவை, மச்ச, கூர்ம, வாமன, ராம, கிருஷ்ண, மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அழகர். தொடர்ந்து வண்டியூர் கோயிலில் இருந்து புறப்பட்டு தேனூர் மண்டபம் சென்ற கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருளினார். வழி முழுவதும் மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர் செவ்வாய்க்கிழமை இருப்பிடம் சேர்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.