சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி செல்லும் வழியில், சிதம்பரத்தில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவிலும், காட்டுமன்னார்குடியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் திருநாரையூர் சிவஸ்தலம். 
ஆன்மிகம்

ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோவில் - திருநாரையூர்

விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம் உள்ள ஒரு சிவாலயத்தைப் பற்றி நாம் இதில் தெரிந்து கொள்ளப் போகிறோம். பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 33-வது தலமாக விளங்குவது திருநாரையூர்.  படங்கள்: கடம்பூர் விஜயன் 

DIN
சிதம்பரம் - காட்டுமன்னார்குடி (வழி - குமராட்சி) சாலையில் செல்லும் பேருந்துகளில் சென்று திருநாரையூர் விலக்கு நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஒரு கி.மீ. நடந்தால் இத்தலத்தை அடையலாம்.
கோவில் முகப்பு வாயிலுக்கு வெளியே, கிழக்கில் காருண்ய தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது.
முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் சிறிய விநாயகரும், நந்தி மண்டபமும் உள்ளன. கொடி மரம் இல்லை.
78 அடி உயரமுள்ள கிழக்கு நோக்கிய கம்பீரமான மூன்று நிலை ராஜகோபுரத்துடன் சுமார் 5.5 ஏக்கர் நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.
மூலவர் சௌந்தரேஸ்வரர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.
இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால், இவருக்கு சுயம்பிரகாச ஈஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதி தெற்கு நோக்கி சிவன் சன்னதிக்கு வெளியே வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கில் தனிக்கோயில் அமைப்பில் அமைந்துள்ளது.
இறைவன் சந்நிதி விமானம் அர்த்தசந்திர வடிவில் இரண்டு கலசங்களுடன் காணப்படுகிறது.
இத்தகைய அமைப்பிலுள்ள விமானத்தை தரிசிப்பது அபூர்வம். சிவன், சக்தியின் வடிவமாகிய அம்பிகையை தனக்குள் ஐக்கியப்படுத்தியிருக்கிறார் என்ற தத்துவத்தின் அடிப்படையில், அவளுக்கும் சேர்த்து இரண்டு கலசங்கள் அமைத்த
இத்தலத்தில் விமானத்தை தரிசிப்பது அபூர்வம். சிவன், சக்தியின் வடிவமாகிய அம்பிகையை தனக்குள் ஐக்கியப்படுத்தியிருக்கிறார் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இரண்டு கலசங்கள் அமைத்துள்ளது.
நடராஜருக்கும் இத்தலத்தில் தனிச்சன்னதி இருக்கிறது.
சிவன் கோயில்களில் ஒரு சண்டிகேஸ்வரர் இருப்பார். இங்கு ஒரே சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம்.
பிராகாரத்தில் ஒரே இடத்தில் மூன்று பைரவர்கள் காட்சி அளிக்கின்றனர். இவர்களது தரிசனம் விசேஷமானது.
திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT