மயல் கூடு கட்டி, முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும். சுமார் 200 நீண்ட தோகைகள் இதன் வால்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ANI
ஒவ்வொரு தோகையிலும் கண் வடிவங்கள் உள்ளன. மயில் அத்திப்பழத்தை விரும்பி உண்ணும். கிழங்குகள், இலைகள்,தேன் ஆகியவற்றையும் உண்ணும்.ஆண் மயில் தன் துணையை கவர்ந்து இழுக்க கார்மேகம் சூழ்ந்திருக்கும் சமயத்தில் தோகையை விரித்து ஆடும்.
பெண் மயிலுக்கு நீண்ட தோகை கிடையாது. மயில்களால் அதிக உயரம் பறக்க முடியாது.தோகையை விரிக்கும்போது இவை மிகவும் அழகாக அனைவரையும் கவரும் வகையில் காட்சி தருகிறது.மயிலின் குரல் கரடுமுரடாக இருக்கும். ஆனால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.மயில் பல விதங்களில் ஒலி எழுப்பும் தன்மை கொண்டது. பொழுது சாயும்போதும் ஒரு ஒலியும், அதிகாலை விடியும் போது ஒரு விதமான ஒலியெழுப்பி ஆச்சரியப்படுத்தும்.