21.5.1976: மதுவிலக்கு அமல் - த.நா. முழுவதும் கிராம மட்டத்தில் கண்காணிப்பு குழுக்கள்
மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்த த.நா. முழுவதும் கண்காணிப்பு குழுக்கள்...
சென்னை, மே: 20 - மதுவிலக்குச் சட்டத்தை அதிக அளவு கண்டிப்பாக அமல் நடத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் கிராம மட்டத்தில் கண்காணிப்புக் கமிட்டிகள் அமைக்கப்படவிருக்கின்றன.
தஞ்சை, திருநெல்வேலி, வட ஆற்காடு ஜில்லாக்களில் ஏற்கனவே இத்தகைய கமிட்டிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வட ஆற்காடில் பஞ்சாயத்து போர்டு தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு இத்தகைய கமிட்டியே காரணம்.
1974 செப்டம்பரில் மதுவிலக்கு மீண்டும் அமலாக்கப்பட்ட பின்னர் 13 ஆயிரம் கள்ளச் சாராயம் காய்ச்சுவோரும், 50 ஆயிரம் பேர் கள்ளச் சாராயம் வைத்திருந்ததும், 1974 டிசம்பருடன் முடிந்த 4 மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்டனர். 1975-ல் மொத்தம் 4.5 லட்சம் பேர் பிடிபட்டனர். ரூ. 1.40 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
சேலம், வடஆற்காடு, கோவை, ராமநாதபுரம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய ஜில்லாக்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பேர் போனவை என்று சொல்லப்படுகிறது. சுமார் ஒரு மாதத்தில் 500 கேஸ்கள் இந்த ஜில்லாக்களில் பிடிபடுகின்றன.
இதனைத் தடுக்க போலீஸ் கோஷ்டிகள், மொபைல் கோஷ்டிகள் சோதனை நடத்துகின்றன. ...
... பதனீருக்குப் பதில் கள்ளிறக்குவது தஞ்சை, ராமநாதபுரம், வடஆற்காடு, திருநெல்வேலி ஜில்லாக்களில் நடக்கிறது.
சில ஜில்லாக்களில் உதவி பப்ளிக் பிராசிகியூட்டர்கள் இல்லாததால் கோர்ட்டுகளில் மதுவிலக்கு வழக்குகளை நடத்துவது சங்கடமாக உள்ளது. மதுவிலக்கு வழக்குகளை உதவி பப்ளிக் பிராசிகியூட்டர் நடத்துவதற்காக தனி ரெவினியூகளை நியமிக்குமாறு போர்டுக்கு ஏற்கெனவே பிரேரணை அனுப்பப்பட்டிருக்கிறது.
குளோரல் ஹைட்ரேட் அபாயகரமான மருந்து. உ.பி., பீஹார், போன்ற மாநிலங்களிலிரு ந்து வரவழைக்கப்படுகிறது. குருடு, மரணம் ஏற்படும் அபாயம் இம் மருந்தினால் உண்டு. ஆயுர்வேத மருந்துகளில் இம்மருந்தும் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. போலீசார் இது குறித்து கண்காணித்து வருகின்றனர்.
பி. இ. படிப்பு காலம் 4 ஆண்டாக குறையும்?
புது டில்லி, மே.19- தான் அமைத்த ஒரு கமிட்டியின் சிபாரிசை அகில இந்திய தொழில் நுணுக்கக் கல்விக் கழகம் ஏற்பதாக இருந்தால், 1980-81 ஆம் ஆண்டிலிருந்து என்ஜினியரிங் பட்டப் படிப்புக் காலம் 4 ஆண்டுகளாகக் குறையும்.
கழகத்தின் கூட்டம் வெள்ளிக் கிழமையன்று இங்கு நடைபெற இருக்கிறது.
பல்கலைக்கழக மான்யக் கமிஷனுடன் சேர்ந்து தொழில் நுணுக்கக் கல்விக் கழகம் இந்தக் குழுவை ஜி.ஆர். தாமோதரன் (பி.எஸ்.ஜி. தொழில் நுணுக்கக் கல்விக் கல்லூரி டைரக்டர்) தலைமையில் அமைத்தது.
தொழில் நுணுக்க டிப்ளமாவுக்கு 10 ஆண்டு பள்ளிப் படிப்பு குறைந்தபட்சப் படிப்பாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், இந்த டிப்ளமா படிப்புக் காலம் 3 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட வேண்டுமென்றும் கழகம் சிபாரிசு செய்திருக்கிறது.
May 21, 1976: Prohibition Implemented — Vigilance Committees Formed at the Village Level Across Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.