முகப்பு
செய்திகள்

புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்!

பூண்டுகளை காற்றோட்டம் நிறைந்த இடத்தில் வைப்பதால், அது முளை கட்டி விடும். மேலும் சிலர் பூண்டு முளை கட்ட ஆரம்பித்து விட்டால்

Updated On : 26 செப்டம்பர் 2018, 2:24 pm IST
பகிர்:

பூண்டுகளை காற்றோட்டம் நிறைந்த இடத்தில் வைப்பதால், அது முளை கட்டி விடும். மேலும் சிலர் பூண்டு முளை கட்ட ஆரம்பித்து விட்டால் அவை உடலுக்கு தீங்கு தரும் என்று தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால், அதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. 

முளை கட்டிய பூண்டுகளை தூக்கி எறியாமல் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்:

முளை கட்டிய பூண்டில் பைட்டோ கெமிக்கல்களின் உற்பத்தி தூண்டப்படுவதால், அது புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

Advertisement

Advertisement

உடலில் நொதிகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவதைத் தடுத்து, இதய நோய்கள் வருவதை தடுக்கிறது.

ரத்தம் உறைவதைத் தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த அழுத்த பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முளைக்கட்டிய பூண்டுகளில் ஏராளமாக இருப்பதால், இது சரும சுருக்கம் ஏற்படுவதை தடுத்து, முதுமைத் தோற்றத்தை தாமதமாக்குகிறது.

உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, நோய்த் தொற்றுகள் மூலம் அடிக்கடி ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.

உடலினுள் பல்வேறு கிருமிகளை எதிர்த்துப் போராடி, ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டு பிரச்னைகள், வீக்கம் மற்றும் தைராய்டு பிரச்னைகளை குறைக்க உதவுகிறது.

நரம்பு செல்கள் சீரழிவதைத் தடுத்து, உடலில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, அதன் செயல்பாட்டை சீராக்கி, நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதை தடுக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments