FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: நிலாவரை

வாயுப்பிடிப்பு மற்றும் உடல் வலி நீங்க நிலாவரை இலையுடன் ஒமம் சேர்த்து வேகவைத்து எடுத்து துணியில் சுற்றி ஒத்தடம் கொடுத்தால் வாயுப் பிடிப்பு மற்றும் உடல் வலி ஆகியவை நீங்கும்.

Updated On : 29 ஜூன் 2018, 12:00 am IST
பகிர்:

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

  • வாயுக் கோளாறுகள், மலச்சிக்கல் நீங்க நிலாவரை இலை, சுக்கு, ஓமம், வாய்விளங்கம் அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து, இரவில் மட்டும் இரண்டு கிராம் பொடியைச் சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் வாயுக் கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் நீங்கும்.
  • வாயுப்பிடிப்பு மற்றும் உடல் வலி நீங்க நிலாவரை இலையுடன் ஒமம் சேர்த்து வேகவைத்து எடுத்து துணியில் சுற்றி ஒத்தடம் கொடுத்தால் வாயுப் பிடிப்பு மற்றும் உடல் வலி ஆகியவை நீங்கும்.
  • குடல் பூச்சிகள்  வெளியேற நிலாவரை இலை(5), பூண்டு (1 பல்) இவை இரண்டையும் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் ஒழியும்.
  • இளநரை நீங்கி முடி செழிப்பாக வளர நிலாவரைப் பூ, ஆவாரம் பூ, சரக்கொன்றைப் பூ, பொன்னாவரைப் பூ, செம்பருத்திப் பூ சுருள் பட்டை இவை அனைத்தையும் தலா 50 கிராம் எடுத்து பீட்ரூட் சாற்றில் (அரை லிட்டர்) இரண்டு நாள் ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மறையும். முடியும் நன்றாகச் செழித்து வளரும்.
  • தலைவலி, ஒற்றைத் தலைவலி நீங்க நிலாவரை, சோம்பு, சீரகம், அதிமதுரம் அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து  சாப்பிட்டு வந்தால் தலை வலி, ஒற்றைத் தலைவலி தீரும்.
  • உடல் பருமன் குறைய நிலாவரை, பொன்னாங்கண்ணி, ஆவாரை  இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து இரவில் மட்டும் 2 கிராம் பொடியை சுடுநீரில் கலந்து ஆறு மாதங்கள் வரை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments