இன்றைய மருத்துவ சிந்தனை: நெருஞ்சில்.
சிறுநீரகக் கற்கள் கரைய நெருசில், தனியா இவை இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்துக் காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.
உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- சிறுநீரகக் கற்கள் கரைய நெருசில், தனியா இவை இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்துக் காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.
- யானை நெருஞ்சில் விதையை (25 கிராம்) எடுத்து நன்றாக அரைத்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வந்தால் சிறுநீரகக் கல் கரையும்.
- சிறுநீரக சார்ந்த கோளாறுகள் நீங்க நெருஞ்சிக் காயைப் பொடிசெய்து 2ஸ்பூன் அளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து காய்ச்சிக் குடித்து வந்தால் நீர் எரிச்சல்,சிறுநீர் குறைவு, நீர் அடைப்பு, சதை அடைப்பு போன்ற குறைபாடுகள் தீரும்.
- இதயம் சார்ந்த பிரச்சனைகள் தீர நெருஞ்சில், வால் மிளகு, சிறுநாகப் பூ இவை மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து தினமும் காலை மாலை என இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் அனைத்தும் தீரும்.
- குழந்தைப்பேறு கிடைக்க நெருஞ்சில் இலை (50 கிராம்) அளவு எடுத்து அதனுடன் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து, அதைப் பாதியாக காய்ச்சி, தினமும் சிறிதளவு குடித்து வந்தால் பெண்களுக்கான கர்ப்பப்பைக் கோளாறுகள் சரியாவதுடன், குழந்தைப்பேறு உண்டாகும்.
- வெள்ளைப்படுதல் மற்றும் நீர்க்கடுப்பு நீங்க நெருஞ்சில் காய், நெருஞ்சில் வேர் இவை இரண்டையும் பச்சரிசியோடு சேர்த்து வேகவைத்து கஞ்சியை வடித்து அதில் கொஞ்சம் சர்க்கரையை சேர்த்துக் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் மற்றும் நீர்க்கடுப்பு போன்றவை குணமாகும்.
- பெண்கள் பருவமடைய நெருஞ்சில் வேர் (சிறிதளவு),எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால்,பூப்படையாத பெண்கள் பூப்பெய்துவார்கள்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC
கோவை பாலா,
Advertisement
Advertisement
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609 / Covaibala15@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.