உணவே மருந்து

காம உணர்வு அதிகரிக்க உதவும் மருந்து

முதலில் வெண் பூசணிக்காய் மற்றும் மாங்காய் ஆகியவற்றை நன்றாக கழுவி தோலுடன் துருவி வைத்துக் கொள்ளவும்

கோவை பாலா

 
வெண் பூசணிக்காய் பச்சடி

தேவையான பொருட்கள்
 
வெண் பூசணிக்காய் - 200 கிராம்
மாங்காய் - 100 கிராம்
தேங்காய்த் துருவல்  - 100 கிராம்
தக்காளி - 2
மிளகுத் தூள் - 5 கிராம்
பூண்டு  -  2 பல்
உப்பு -  தேவையான அளவு
சீரகத் தூள்   -  அரைத் தேக்கரண்டி

செய்முறை
 
முதலில் வெண் பூசணிக்காய் மற்றும் மாங்காய் ஆகியவற்றை நன்றாக கழுவி தோலுடன் துருவி வைத்துக் கொள்ளவும். பின்னர் தக்காளி, சீரகம், மிளகு, பூண்டு அனைத்தையும் நன்றாக அரைத்து விழுதாக்கி  துருவி வைத்துள்ள காய்களுடன் சேர்த்து அதனுடன் தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும்.

அனைத்தையும்  நன்கு கலக்கி  தேவையான அளவு உப்பு சேர்த்து உணவில் பச்சடியாக எடுத்துக் கொள்ளலாம்.

பயன்கள : இதனை தொடர்ந்தோ அல்லது வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு சாப்பிட்டுவந்தால்   காமம் அதிகரிக்கும். சிறிநீர் அதிகமாக வெளியேறும். மலத்தை நன்கு இளக்கி வெளியேற்றி  மலச்சிக்கல் இல்லாமல் இருக்கலாம்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்தக் கோரி எம்எல்ஏவிடம் மனு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவடையும்: ஆட்சியா்

புறா பந்தயத்தில் வென்றோருக்கு பரிசு

விளாத்திகுளம், நாகலாபுரத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

ஈ.வெ.ரா. பெரியாா் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் மரியாதை: அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பு

SCROLL FOR NEXT