பசியின்மையைப் போக்கி நன்றாக பசியுணர்வைத் தூண்ட உதவும் இந்த சூரணத்தை பயன்படுத்தி பலனடையுங்கள்.
தேவையான பொருள்கள்
மிளகு - 100 கிராம்
ஆரஞ்சு பழச்சாறு - 400 மி.லி
செய்முறை
முதலில் மிளகைத் தேவையான அளவு எடுத்துச் சுத்தப்படுத்தி தூளாக்கிக் கொள்ளவும். ஆரஞ்சு பழத்தை எடுத்து தண்ணீர் விடாமல் பிழிந்து மேற்கூறிய அளவு எடுத்துக் கொள்ளவும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் மிளகுத் தூளைச் சேர்த்துக் கலக்கி சிறிது நேரம் ஊறவைத்து பின்பு அதனை நன்கு உலர வைத்து அதனை அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
பயன்கள்
இந்த சூரணம் பசியின்மையைப் போக்கி நன்றாக பசியுணர்வைத் தூண்ட உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாட்டினால் துன்பப்படுபவர்கள் மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இரண்டு கிராம் அளவு எடுத்து சுடுநீரில் அல்லது தேனில் கலந்து குடித்து வரவும். 21 நாட்கள் தொடரவும். பின்பு தேவையறிந்து எடுத்துக் கொள்ளவும். நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
- கோவை பாலா,
இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell : 96557 58609 , 75503 24609
Covaibala15@gmail.com
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
Telegram குழுவில் இணைய
https://t.me/kovaibalavegetableclinic