ஹமீத் அன்சாரி துருக்கி பயணம்
புதுதில்லி,அக்.8: குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி 6 நாள் சுற்றுப் பயணமாக திங்கள் கிழமை துருக்கி செல்ல உள்ளார். இப்பயணத்தில் இரு நாடுகளுக்குமிடையே வர்த்தக உடன்படிக்கைகள் கையெழுத்தாகும் என்று எதிர்
புதுதில்லி,அக்.8: குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி 6 நாள் சுற்றுப் பயணமாக திங்கள் கிழமை துருக்கி செல்ல உள்ளார். இப்பயணத்தில் இரு நாடுகளுக்குமிடையே வர்த்தக உடன்படிக்கைகள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவருடன் சமூக நலவாழ்வு மற்றும் நீதிக்கான அமைச்சர் முகுல் வாஸ்னிக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி மற்றும் எம்.பி க்கள் ரஞ்ஜித் சிங்,விஜய் சிங் பாட்டில், விஜய் பால் சிங்,இம்கிரிட் மெக்லியோட் மற்றும் தொழிலதிபர்களும் செல்கின்றனர். இஸ்தான்புல்-லில் நடைபெற இருக்கும் தொழிலதிபர்களுக்கான கூட்டத்தில் அன்சாரி கலந்து கொள்ள இருக்கிறார்.
இப்பயணத்தில் இரு நாடுகளுக்குமிடையே தகவல் தொழில் நுட்பம்,கட்டமைப்பு வசதிகள், பொறியியல் துறை போன்ற வர்த்தக பரிமாற்ற பேச்சுகள் இடம்பெறும் என்று வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் செயலாளர் மதுசூதன் கணபதி தெரிவித்தார்.
Advertisement
Advertisement
2003-ம் ஆண்டிற்குப் பிறகு இப்பொழுது தான் இந்திய பிரதிநிதிகள் துருக்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.