முகப்பு
இந்தியா

கனமழை: கொச்சி செல்ல வேண்டிய விமானம் சென்னையில் தரையிறக்கம்

சவுதி அரேபியாவில் இருந்து கொச்சிக்கு வந்து கொண்டிருந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானம் கொச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக, சென்னையில் தரையிறக்கப்பட்டது.

Updated On : 7 ஆகஸ்ட் 2017, 11:09 am IST
பகிர்:


சென்னை: சவுதி அரேபியாவில் இருந்து கொச்சிக்கு வந்து கொண்டிருந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானம் கொச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக, சென்னையில் தரையிறக்கப்பட்டது.

கேரளாவில் கொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சவுதி அரேபியாவில் இருந்து கொச்சி நோக்கி வந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானம், அப்பகுதியில் கன மழை பெய்ததால் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. 

Advertisement

Advertisement

உடனடியாக சவுதி ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் வந்த 290 பேர் 10 மணி நேரத்துக்கும் மேலாக சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.