ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகார சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகார சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகார சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் நிரந்தர குடியிருப்பு வாசிகளுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் "சட்டப் பிரிவு 35ஏ'-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சிப் பிரிவுகளுக்கான தேர்தல் நடைபெற இருப்பதைக் கருத்தில் கொண்டு, சட்டப்பிரிவு 35ஏ-வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் அரசு உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது.
Advertisement
Advertisement
ஆனால் ஜம்மு காஷ்மீர் அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. வழக்கை விசாரிக்கும் 3ஆவது நீதிபதி சந்திரசூட் வராத காரணத்தால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் உத்தரவின் பேரில் கடந்த 1954-ஆம் ஆண்டு அரசமைப்பில் சேர்க்கப்பட்ட "சட்டப்பிரிவு 35-ஏ'-ஆனது, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்தையும், சில உரிமைகளையும் வழங்குகிறது. அந்தச் சட்டப் பிரிவின்படி, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்யும் ஜம்மு-காஷ்மீர் பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.