ஜார்க்கண்ட்: ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ரத்து
ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் உள்ள கேரள சமாஜம்' என்ற மலையாள மக்கள் சங்கம், இந்த ஆண்டு ஓணம்
ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் உள்ள கேரள சமாஜம்' என்ற மலையாள மக்கள் சங்கம், இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடுவதை ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் பொது செயலாளர் சுனில் குமார் கூறியதாவது: எங்கள் சங்கத்தின் சார்பாக ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு கேரளாவில் உள்ள எங்கள் சகோதர, சகோதரிகள் அனைவரும் மழையினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்துக்காக போராடி வருகின்றனர். இந்த வேளையில் ஓணம் கொண்டாடும் நிலையில் நாங்கள் யாரும் இல்லை. சங்க உறுப்பினர்கள் மூலம் ஜாம்ஷெட்பூர் முழுவதும் ஒரு வாரம் பிரச்சாரம் செய்து நிவாரண நிதி மற்றும் அடிப்படைத் தேவைக்கான பொருள்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை கேரள மக்களுக்கு செய்யுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சங்கம் சார்பாக 2 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு மீட்பு பணிக்கு தேவையான பொருள்களை பெற்று வருகிறோம். திரட்டப்பட்ட நிதி மற்றும் பொருள்கள் கேரள முதல்வர் நிவாரண நிதி மற்றும் நிவாரண முகாம்களுக்கு தன்னார்வலர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.
இதுகுறித்து தால்பம் பகுதி துணை நிலை அதிகாரி கூறுகையில், இது வரவேற்க வேண்டிய முடிவு. நிவாரண நிதி திரட்டுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதி கேட்கும் அவசியம் இல்லை. நிதி திரட்டுபவர்களுக்கு ஒத்துழைப்பு தரக் கூறி காவல் துறையினரிடமும் அறிவுறுத்தியுள்ளோம் என்று கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.