தில்லி விமான நிலையத்தில் பெண் பயணி வீசிய பவர் பேங்க் வெடித்தது; பெண் கைது
தில்லி விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த போது அதில் இருந்த பவர் பேங்கை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகள் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
புது தில்லி: தில்லி விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த போது அதில் இருந்த பவர் பேங்கை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகள் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி கோபமடைந்த பெண் பயணி, தனது பையில் இருந்த பவர் பேங்கை எடுத்து தூக்கி வீசியதால் அது வெடித்துச் சிதறியது.
இதனால் அங்கிருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர். உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் காவல்துறையை அழைத்ததன் பேரில், அந்த பெண் கைது செய்யப்பட்டு பின்னர் பெயிலில் விடுதலை செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement
அந்த பெண்ணின் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.