FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அட.. இதில் இந்தியா இரண்டாவது இடமா? கொந்தளிக்கும் வாடிக்கையாளர்கள்

செல்போனில் தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் வரும் போது நாம் கொந்தளிப்பது போதாது என்று இந்த செய்தியைப் படித்தும் கொந்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:


செல்போனில் தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் வரும் போது நாம் கொந்தளிப்பது போதாது என்று இந்த செய்தியைப் படித்தும் கொந்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது 2018ம் ஆண்டு ஸ்பேம் எனப்படும் தேவையற்ற அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் மக்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்திருக்கிறது.

முதல் இடத்தில் இருந்த இந்தியாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரேசில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Advertisement

Advertisement

ட்ரூகாலர் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் ஸ்பேம் அழைப்புகளின் எண்ணிக்கை மாதத்துக்கு 22.3 அழைப்புகள் என பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 1.5 சதவிகிதம் குறைவாகும்.

இதுவே பிரேசில் நாட்டு மக்களுக்கு மாதத்துக்கு 37.5 ஸ்பேம் அழைப்புகள் என்ற அளவில் உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 81 சதவிகிதம் அதிகம்.

இவ்விரண்டு இடத்துக்கும் அடுத்த இடத்தில் சிலி, தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் இடம்பிடித்துள்ளன.

சரி.. அதிக ஸ்பேம் அழைப்புகளைச் செய்யும் நிறுவனங்கள் யார் என்று கணக்கெடுத்தால் அதில் அடுத்த அதிரடி காத்திருக்கிறது. அதாவது,  இந்தியாவில் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்களே அதிக ஸ்பேம் கால்களை செய்கின்றனவாம். கொஞ்ச நஞ்சமல்ல, சுமார் 91 சதவிகித ஸ்பேம் கால்களை செய்ததே டெலிகாம் நிறுவனங்கள்தானாம். அதாவது சராசரியாக ஒரு பயனாளருக்கு வரும் ஒவ்வொரு 4வது அழைப்பும் ஸ்பேம் அழைப்பாகவே இருக்கிறதாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments