FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிஎஸ்இ அமைப்புக்கு "இந்திரா காந்தி விருது'

அமைதி மற்றும் வளர்ச்சிக்கான "இந்திரா காந்தி விருது', தில்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான "சிஎஸ்இ'-க்கு (அறிவியல்-சுற்றுச்சூழல் மையம்) வழங்கப்பட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:

அமைதி மற்றும் வளர்ச்சிக்கான "இந்திரா காந்தி விருது', தில்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான "சிஎஸ்இ'-க்கு (அறிவியல்-சுற்றுச்சூழல் மையம்) வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் நிலையான பங்களிப்பை செய்துவரும் சிஎஸ்இ அமைப்புக்கு இந்திரா காந்தி விருது வழங்கப்படுகிறது. 
மேலும், இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களில் அந்த அமைப்பு வழங்கியுள்ள பங்களிப்புகளும் கருத்தில் கொள்ளப்பட்டு இந்த விருது வழங்கப்படுகிறது. சிஎஸ்இ அமைப்பானது, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை விவகாரத்தை தேசிய அளவில் கவனம் பெறச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்பட்டது குறித்து சிஎஸ்இ அமைப்பின் இயக்குநர் சுனிதா நரைன் கூறுகையில், "மாற்றத்துக்கான பங்களிப்பு செய்தவர்களின் பட்டியலில் எங்களது நிறுவனமும் இணைவது, எங்களுக்கான கெüரவமாகும். 
எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருதானது, உலகம் இன்று எதிர்கொண்டுள்ள பருவநிலை மாற்றம், நியாயமற்ற வளர்ச்சி, சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றை எதிர்கொள்வதற்காக கிடைத்துள்ள அங்கீகாரமாகும்' என்றார்.
கடந்த 1980-ஆம் ஆண்டு அனில் குமார் அகர்வால் என்ற சுற்றுச்சூழலியலாளரால் தொடங்கப்பட்ட சிஎஸ்இ அமைப்பானது, கடந்த சுமார் 40 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கொள்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்திரா காந்தி விருதை வழங்கும் இந்திரா காந்தி அறக்கட்டளையானது, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை தலைவராகக் கொண்டதாகும். சர்வதேச அமைதி, வளர்ச்சி, ஆக்கப்பூர்வமான அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பங்களிப்பு செய்துவரும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் இந்த அறக்கட்டளை விருது வழங்கி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments