FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை "தீதி: தி அன்டோல்ட் மம்தா பானர்ஜி' என்ற பெயரில் பத்திரிகையாளர் சுடாபா பால் எழுதியுள்ளார். இந்நூல் பென்குயின் இந்தியா நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது. திங்கள்கிழமை முதல் இந்த நூல் நாடெங்கிலும் விற்பனைக்கு வந்துள்ளது. மம்தா தனது வாழ்க்கையில் சந்தித்த பிரச்னைகள், அதை சமாளித்து அவர் மீண்டெழுந்து வந்த சாதனைகள், கல்லூரி கால அரசியலில் இருந்து மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசை தோற்கடித்து 2011-ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது வரை அனைத்தையும் அந்நூலில் பால் கூறியுள்ளார். 
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து இந்திய அரசியலில் எவ்வாறு மம்தா கால் பதித்தார்? என்றும், தேசிய தலைவராக உருவெடுத்தது குறித்தும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். மம்தா பானர்ஜி நாட்டின் வலிமையான, கடினமான பெண்களில் ஒருவர் என்றும் அவர் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2019-ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் அவரது பங்கு என்னவாக இருக்கலாம் என்பது குறித்தும் அந்த நூலில் எழுதப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments