முகப்பு
இந்தியா

விரைவில் பெயர் மாறுகிறதா அலகாபாத்?: முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல் 

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரின்  பெயர் விரைவில் பிரயாக்ராஜ் என மாற்றப்பட உள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Updated On : 14 அக்டோபர் 2018, 2:59 pm IST
பகிர்:

லக்னௌ: உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரின்  பெயர் விரைவில் பிரயாக்ராஜ் என மாற்றப்பட உள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உலகப் புகழ் பெற்ற கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 15-ல்  தொடங்க உள்ளது. இந்த விழாவினை முன்னிட்டு அலகாபாத் மாநகரின் பெயர் பிரயாக்ராஜ் என மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரின்  பெயர் விரைவில் பிரயாக்ராஜ் என மாற்றப்பட உள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து பல்வேறு தரப்பினரிடமும்  கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்டால் அலகாபாத் என்னும் பெயரானது 'பிரயாக்ராஜ்' என மாற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பெயர் மாற்ற அறிவிப்பானது கும்பமேளா தொடங்குவதற்கு முன் வெளியாகும் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments