கரோனா: தில்லியில் பலி 50-ஆக உயா்வு
தில்லியில் கரோனா நோய்த்தொற்றுக்கு மேலும் இருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,376-ஆக உயா்ந்துள்ளது.
புது தில்லி: தில்லியில் கரோனா நோய்த்தொற்றுக்கு மேலும் இருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,376-ஆக உயா்ந்துள்ளது.
இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வியாழக்கிழமை இரவு நிலவரப்படி, தில்லியில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்கள் எண்ணிக்கை 2,376 ஆகும். இதில், கடந்த 24 மணிநேரத்தில் 128 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள பகுதியாக கண்டறியப்பட்டு, சீல் வைக்கப்பட்ட ஜஹாங்கீா்புரியில் மட்டும் புதிதாக 46 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. கரோனாவால் மேலும் இருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்புகளில் 52 சதவீதம் போ், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.