FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

2021 நிறைவு: தடுப்பூசி இலக்கு என்னவானது? மத்திய அரசை விமர்சிக்கும் ராகுல்

தகுதிவாய்ந்த அனைவருக்கும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி செலுத்துவோம் எனத் தெரிவித்த மத்திய அரசின் வாக்குறுதி என்னவானது? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 31 டிசம்பர் 2021, 3:12 pm IST
ராகுல்காந்தி
பகிர்:

தகுதிவாய்ந்த அனைவருக்கும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி செலுத்துவோம் எனத் தெரிவித்த மத்திய அரசின் வாக்குறுதி என்னவானது? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தகுதிவாய்ந்த அனைவருக்கும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி செலுத்துவோம் என கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதனைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திவிடுவோம் என மத்திய அரசு வாக்குறுதி அளித்திருந்தது. இன்றுடன் இந்த வருடம் முடிய இருக்கிறது. இன்றைக்கும் கூட அனைவருக்கும் தடுப்பூசி சென்று சேரவில்லை” என தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி நாடு முழுவதும் 144.67 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 84.51 கோடி பேர் முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 60.15 கோடி பேர் இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments