FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

டிபிஎல்: சூப்பர் ஓவருக்கு வித்திட்ட வித்தியாசமான ரன் அவுட்!

தில்லி பிரீமியர் லீக்கில் கவனம் பெற்ற வித்தியாசமான ரன் அவுட் குறித்து...

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 2:56 pm IST
சூப்பர் ஓவருக்கு வித்திட்ட வித்தியாசமான ரன் அவுட். - படங்கள்: எக்ஸ் / ஃபேன்கோட்
பகிர்:

தில்லி பிரீமியர் லீக்கில் கடைசி பந்தில் 1 ரன் தேவையாக இருக்கும்போது, ஃபீல்டிங்கை தவறவிட்ட கடுப்பில் எட்டி உதைத்த பந்தினால் ரன் அவுட் ஆன சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தில்லி பிரீமியர் லீக்கின் எட்டாவது போட்டியில் நியூ தில்லி டைகர்ஸ் மற்றும் அவுட்டர் தில்லி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூ தில்லி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதில் நியூ தில்லி டைகர்ஸ் அணி 156 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக லக்‌ஷய் தரேஜா 62, கேப்டன் ஹிம்மத் சிங் 61 ரன்களும் குவித்தார்கள்.

Advertisement

Advertisement

மழையின் காரணமாக போட்டி 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டிஎல்எஸ் விதியினால் இலக்கு 156ஆக நிர்ணயிக்கப்பட்டது. அடுத்து விளையாடிய அவுட்டர் தில்லி வாரியர்ஸ் அணி 15 ஓவர்களில் 155 ரன்களே எடுத்தது.

கடைசி பந்தில் ஒரு ரன் தேவையாக இருந்த சமயத்தில் பந்தை பிடிக்க தவறிய கேப்டன், கோபத்தில் பந்தை எட்டி உதைக்க, பந்து சரியாக ஸ்டம்பில் பட்டு ரன் அவுட் ஆனது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது.

இந்த நம்பமுடியாத விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிறகு, சூப்பர் ஓவரில் அவுட்டர் தில்லி வாரியர்ஸ் அணி 20 ரன்கள் குவித்து, 6 ரன்களுக்குள் எதிரணியை 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

summary

DPL 2026 chaos: Himmat Singh's kick in frustration sparks freak run-out to force Super Over

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments